×

திருப்புத்தூரில் எம்ஜிஆர் நினைவுநாள் அனுசரிப்பு

திருப்புத்தூர், டிச.25: திருப்புத்தூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 32வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். திருப்புத்தூர் காந்திசிலை அருகே அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமையில், ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகரச் செயலாளர் இப்ராம்ஷா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்து பேருந்துநிலையம், மதுரை ரோடு வழியாக அண்ணாசிலை வரை மவுன ஊர்வலம் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் முன்னாள் யூனியன் சேர்மன் கரு.சிதம்பரம், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் புதுத்தெரு முருகேசன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்த், ஒன்றிய துணை செயலாளர் காட்டாம்பூர் முருகேசன், நகர் துணைத்தலைவர் வக்கீல் ரவீந்திரன், வக்கீல் ராஜசேகர் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிவகங்கையில் கன மழை